கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 1 August 2018

பணி நிறைவு விழா

      சமுத்திரா பட்டி... அரசு மேல்நிலைப் பள்ளியின்   இளநிலை உதவியாளர்
 திரு.கு. ராஜாராம் அவர்களின்  பணி நிறைவு விழா .. நாள் 31.07.2018

 திரு.கு. ராஜாராம் அவர்களின் பணி நிறைவு விழா குழுப் புகைப்படம் 





தலைமை ஆசிரியர் அவர்களின் தலைமை உரை 


உடற்கல்வி ஆசிரியர் திரு .முருகன்  அவர்கள் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார் 

முதுகலை கணித ஆசிரியர் திருமதி .தேவி அவர்களின்  சிறப்புரை 


பள்ளித் தலைமை ஆசிரியர் திரு .பிரகாஷ் அவர்கள் அன்னாருக்கு மோதிரம் அணிவித்து சிறப்பு செய்தார் 


அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு . அனில்  அவர்கள் அன்னாருக்கு சந்தன மாலை  அணிவித்து   கௌரவித்தார் 

கணிதப் பட்டதாரி ஆசிரியர் திரு .வீரன் அவர்கள் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார் 




Sunday, 29 July 2018

SCHOOL AS HOME..திரு .அனில் அவர்களின் படைப்பு https://youtu.be/7tjcGGLXCPA

TNHHSSGTA .. இன்  வாழ்த்துக்கள் 

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் வட்டம் .. அரசு மேல்நிலைப் பள்ளி ,சமுத்திரா பட்டி பட்டதாரி ஆசிரியர் திரு .அனில்   (9943811304) அவர்கள் மாணவர்களுக்கு  சுற்றுச் சூழல் மீது ஆர்வத்தை  அதிகரிக்க "பள்ளிக்கூடமே  வீடாக " -  SCHOOL AS HOME ... என்னும் தலைப்பில் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார் .அவரது முயற்சியைப் பாராட்டுகிறது - TNHHSSGTA ,மாவட்டக்  கழகம் , திண்டுக்கல் ..


Saturday, 30 June 2018

TNHHSSGTA DGL- ன் வாழ்த்துக்கள்

சிறந்த மருத்துவருக்கான தமிழக அரசின் விருது பெற்ற  மருத்துவர் திருமதி .பூங்கோதை செல்வராஜ் அவர்களுக்கு திண்டுக்கல் TNHHSSGTA  மாவட்ட கழகம் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .



திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையின்  தலைமை மருத்துவரும் ,சாணார்பட்டி வட்டார மக்களின்  கைராசி  மருத்துவர்  திரு .செல்வராஜ் அவர்களின் மனைவியாருமான  மருத்துவர்  திருமதி .பூங்கோதை அவர்களின்  மருத்துவ சேவை  , ஏழை எளிய மக்களுக்கு  சிறந்த மருத்துவ சேவை , மருத்துவமனை நிர்வாக மேலாண்மை மற்றும்  போலி மருத்துவர்களை  கண்டறிந்து  மருத்துவ  துறைக்கு  பெருமை சேர்த்தமையைப்  பாராட்டி தமிழக அரசு சிறந்த மருத்துவருக்கான  விருது வழங்கி இருக்கிறது .தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் .சி .விஜய பாஸ்கர்  அவர்கள்  இவ்விருதை வழங்கினார் 






 மருத்துவமனை  சக பணியாளர்கள் வாழ்த்திய போது 



Friday, 29 June 2018

CPS - போராளி ஏங்கல்ஸ் அவர்களின் RTI தபால்கள்

CPS - போராளி ஏங்கல்ஸ் அவர்களின் RTI தபால்கள்



இயக்குநர் அறிவிப்பு-ஆசிரியர்களுக்கு பயிற்சி

இயக்குநர் அறிவிப்பு-ஆசிரியர்களுக்கு பயிற்சி-1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்க தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு செயல்முறைகள்  பிறப்பித்தார்

Wednesday, 23 May 2018

திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்

இடம்.  1.திண்டுக்கல் நாகல் நகர் சிண்டிகேட் பேங்க் முன்பு

2.பழனி பழனி தாலுகா முன்பு.

திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்....

இடம்.  1.திண்டுக்கல் நாகல் நகர் சிண்டிகேட் பேங்க் முன்பு

2.பழனி பழனி தாலுகா முன்பு...

Monday, 30 April 2018

அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ -ஜியோ

அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ -ஜியோ
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
20.4.18 அன்று நாம் நடத்திய ஆர்ப்பாட்டம். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு கிருபாகரன் அவர்களால் கடந்த 7 மாதங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த நெல்லை அரசு தானியங்கிப் பணிமனையில் பணி புரிந்த தோழர்.முருகனின் தத்காலிக பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது, இது ஜn க்டோஜியோ போராட்டக் குழுவிற்கு கிடைத்த வெற்றி. ஜாக் டோ-ஜியோ 10 நாள் வேலை நிறுத்தம் ஒரு அரசு ஊழியர் ஒரு ஆசிரியருக்குக் கூட ஒரு சிறு சிராய்ப்பு கூட இல்லை. ஆனால் மூன்று அரசு ஊழியர் ஆசிரியர்களை இப் போராட் டத்தில் இழந்துள்ளோம். மாறாக அரசின் கரங்களில் இருந்து அக்டோபர் 2018 முதல் ஊதிய மாற்றம் பெற்றிதின் பயனாக 14000 கோடியைப் பறித்துள்ளோம். ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் 10 நாட்கள் வேலை நிறுத்தத்தில் 50% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம் இவ்வளவு பெரிய தொகையை பெற்றுக் கொடுத்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து *மே 8 கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றால் புதிய பென்சன் திட்டம் ரத்தாகும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டு வரைwறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் பெறப்படும் 21 மாத நிலுவைத் தொகை பெறப்படும். இதற்கு ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் இன்றே ரூ.1000 ஒதுக்கீடு செய்து சென்னை முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராவீர். உரிமைகளைப் பெற்று வீடு திரும்ப
சபத மேற்பர்.

 புறப்படுவர்

போர் முரசு
 கொட்டி.


 இவண்.
TNHHSSGTA

மே 8



















கோட்டை முற்றுகைப் போராட்டம்....
வேட்கையோடு விரைந்து வாரீர்...!
அரசு ஊழியர்காள்
ஆசிரியப் பெருந்தகையீர்....!
சிந்தனை செய்வீர்
ஒருகணம்...!!
சிந்திய உழைப்பின் கனிகளை
பந்திபிரித்துத் தின்றவரை
சந்தி வந்து கேட்பீர்...
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை
சங்கத்தின் துணையொடு
சாடிடுவீர்...
ஓட்டிடுவீர்...!
சாதனை செய்யப் பயந்தவர் எவரும்
வேதனை கொண்டே வாழ்வது திண்ணம்...!
எழுச்சிகொண்ட தமிழகத்தில் பிறந்த நீவிர் வீழ்ச்சி கொள்ளலாமா..?
தளர்ச்சியின்றி விரைந்து வாரீர்..!
பத்தோடு ஒன்றாய்ப் பரிணமிக்காமல் பத்துக்கு ஒன்றாய்ப் பரிணமித்திடுவீர்...
புரட்சிப்பாதையில் பயணத்தைத் தொடங்கிடுவீர்...!
மானிட சமுத்திரம் நாமென்று கூவிடுவீர்...!
எங்கும் பாரடா இப்புவி மக்களையென்று
ஓங்கும் குரலில் உரக்க முழங்கிடுவீர் மே8இல்..!
தன்பெண்டு,
"தன்பிள்ளை,சோறு
வீடு. சம்பாத்திம்
இவையுண்டு,
தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகினைப்போல் உள்ளம்கொண்டோன்"
பாரதிதாசன் படைப்பிதனில்
தன்னலத்தைச் சாடியதைப் படித்திருப்பீர்...
சுயநலத்தைத் துறந்திடுவீர்...
பொதுநலத்தைப் போற்றிடுவீர்...!
புதிய ஓய்வூதியத் திட்டம்...
நதியினை இணைத்தாற்போல.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாற்போல..
சுதந்திரம் என்பது சும்மா கிடைக்கவில்லை
"தண்ணீர் விட்டா வளர்த்தோம்....
கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ...?"
பாடினானே பாரதி
செக்கிழுத்த செம்மலைச் சிந்தையில் நிறுத்துங்கள்...!
அண்ணல் காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை
தண்டி யாத்திரையை ...
சிந்தியுங்கள் ஒரு நிமிடம்..!
கொடிகாத்த குமரனை
நாடு போற்றியது எதற்காக...?
வேலுநாச்சியாரை வீரமங்கை என்றதும் எதற்காக?
இந்திராகாந்தியை இன்றளவும்
இதயத்தில் கொண்டது எதற்காக..?
கல்பனா சாவ்லாவை கண்ணிமைபோல்
போற்றுவதும் எதற்காக?
எதற்காக..?எதற்காக..?
நாட்டிற்கு நல்லது செய்வோரை
ஏற்றிவைத்தது இவ்வுலகு...!
இன்று...
கடமையைச் செய்துவிட்டு
உரிமையைக் கேட்பதற்குத்
தயங்கலாமா தோழர்களே...
தோழியரே...!
விரைந்திடுவீர் சென்னைநோக்கி..
சென்னை
மாகாணம் சிலிர்க்கட்டும் உம் வரவுகண்டு...!
வீரம்கண்டு...!!
படித்தவரே பயந்துவாழ்ந்தால்
அடித்தளமிடுவோர் யார்தான் இப்புவியில்...?
கண்ணெணப் போற்றிக் கடமையைச் செய்வோரே...!
உரிமையை மீட்க உம் உள்ளம் விழையட்டும்..!
மனமிருந்தால் மார்க்கம் உண்டு..
உம் மனமிருந்தால்
தாக்கமும் உண்டு..!
பெண் ஆசிரியத் தோழிகளே...!
பொறுத்தது போதும்...
பொங்கி
யெழுவோம்...
நாளைய உலகம்
நம் வீரத்தைப் போற்றட்டும்...!
மதுரையில் நீதிகேட்ட கண்ணகிபோன்று
சென்னையில் நீதிகேட்போம் கண்ணகியாய் நின்று..!
ஒருத்தியாம் கண்ணகியைக் காணாத தேசம்
ஓராயிரம் கண்ணகியைக் கண்டு ஓடட்டும்..!
CPSஐ ஓட்டட்டும்...!
பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் புதிய
விதியாய்ப் படைக்கட்டும்..!
இனியொரு விதிசெய்யப் பிறந்தவள் இவளென்று
பாரததேசமே நம்மைப் புகழட்டும்
போற்றட்டும்...!
புறப்படுவீர் சென்னைநோக்கி..
புறம்காணட்டும்  நம் ஒற்றுமைநோக்கி..
புறம் ஓடட்டும் நம் நீதியின் முன்பு..!
பழைய பென்சன் திட்டத்தைப் படைத்திட படைதிரள்வீர்...!!
விடை பெறும்....

இனிய பட்டதாாி ஆசிாிய பெருமக்களே




இனிய பட்டதாாி ஆசிாிய பெருமக்களே

மிகப் பெரிய மாற்றத்தையே புரட்சி என்கிறாா்கள்

உலக வரலாற்றில் எந்த ஒரு புரட்சியும் மாற்றமும் ஒரு நாளிலோ ஒரே முயற்சியிலோ கிடைத்து விடுவது இல்லை . கிடைக்க செய்ய பலரின் தன்னலமற்ற முயற்சியும் , பெரும் எண்ணிக்கை கொண்ட மக்கள் திரட்சி திரட்டி நடத்தபடும் போராட்டங்களும் தேவைபடுகிறது

நமது முன்னோர்கள் தங்களுடைய தொடர் முயற்சியால் காவல் , வருவாய்துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ,
 பயன் அளிக்கும் ஓய்வூதிய திட்டத்தை.
1960 களுக்கு பிறகு ஆசிாியா்களுக்கும் தங்களின் அயராத போராட்ட குணத்தின் மூலம் பெற்று தந்து இருக்கிறாா் தன்னலமற்ற மூத்த  தோழர்கள்

ஆதனால் பெற்ற பெண்ணையும்  , son ஐயும் கூட இறுதி காலத்தில் நம்பி  வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் பென்ஷனை நம்பி இறுதி காலத்தை கழித்தாா்கள் ,.கழித்தும் வருகிறாா்கள்

2003 பிறகு நியமனம் பெற்றவர்களுக்களுக்கு

 பென்சன் இல்லை
 கமுட்டேசன் இல்லை
 கிரஜூட்டி இல்லை

நாம் அதற்கு முன்பு நியமனம் பெற்று விட்டோமே என இருந்து விடலாமா ?

CPS உள்ளவர்களே போராட்டங்களுக்கு வரமாட்டோம் என இருக்கிறாா்கள்.நான்.ஏன் போக வேண்டும் ?  என்கிற உங்கள் கோபப்படுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை

நம் எதிர்கால சந்ததிகளுக்காக
நம் வீட்டு பிள்ளைகளுக்காக
இளைய தலைமுறை ஒருங்கிணைத்து போராட்டங்களத்துக்கு கொண்டு வாருங்கள்

சக்தி வாய்ந்த ஒற்றுபட்ட மே 8
போராட்டம் மட்டுமே நம் தலைமுறையையும்
எதிர்கால தலைமுறையுையும் பாதுகாக்கும்

★ மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணம் ஆசிாியா்கள் பணி நிரவல்

 *பணியிடங்கள் குறைப்பு
*
 பதவி இறக்கம்

 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை

ஏழை எளியவர்கள் பயிலும் அரசு பள்ளிகளின் பாதுகாப்பு

என்கிற பொதுநலமும் தன்னலமும் கலந்த போராட்டத்தில் தனது பங்களிப்பினை செய்ய மே 8 சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு ஆசிாியா்களை திரட்ட
பள்ளி அளவில்
 வட்ட அளவில்
திட்டமிடல் கூட்டங்களை நடத்தி வாகன.ஏற்பாடு பயணத்திட்டங்களை வகுத்திட வேண்டும்
காலம் குறைந்து விட்டது விரைந்து பணியாற்ற வேண்டிய காலமிது உணர்ந்து செயல்படுவோம்.

 வெற்றி நமதே

 அ.மாயவன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

 திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி *தொடர்பு செயலாளர் 

Thursday, 12 April 2018

காவேரி மேலாண்மை வாரியம்

மாவட்ட கழக அறிவிப்பு
====================

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நம் பேரியக்க உடன்பிறப்புக்கள் இன்று (12-04-18)ஆண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சட்டையும் பெண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சேலையும் கட்டி தமிழகம் முழுமையும் சோறுபோடும் விவசாயிகளுக்காக கருப்பு தினம் அனுசரிக்க அணியவேண்டுமாய் நம் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.....

இவண்

திண்டுக்கல் மாவட்ட அமைப்பு
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்



TNHHSSGTA-DGL-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து. தாளையம் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ்,உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்

கீரனுர் ....அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 

அரசு மேல்நிலைப்பள்ளி, இரா.வெள்ளோடு, குஜிலியம்பாறை ஒன்றியம்.


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு""எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாக இணைந்தோம்"






செல்மா பிரியதர்ஸன் மாவட்டச் செயலாளர்

செல்மா பிரியதர்ஸன்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
💪💪💪💪💪💪💪💪

திண்டுக்கல் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் நமது உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமும் உறுப்பு அமைப்பாகும்.

கடந்த காலங்களில்  நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல பொதுப் பிரச்சினைகளுக்கு இவ்வமைப்போடு இணைந்து களம் கண்டிருக்கிறோம் என்பது தாங்கள் அறிந்ததே.

காவேரி மேலாண்மை அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகமே கொந்தளித்து நிற்கும் வேலையில் நாமும் இக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் நமது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் குரல் கொடுப்பவர்கள் அல்ல.

தமிழக விவசாயிகளை
தமிழ் மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க நடைபெறும்
 இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்று முழக்கமிடுவோம்

நாள்   - 11.04.18 புதன்
நேரம் மாலை 5.30 - 7.00
இடம்  பேருந்து நிலையம் அருகில் நீதி மன்ற வளாகம் பின்புறம். திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு.